டமார் என வெடித்து சிதறிய ஸ்பீக்கர்.. அப்படி என்னா பேசினாரோ எஸ்.வி.சேகர்!
எஸ்.வி.சேகர் பள்ளி விழாவில் பேசியபோது மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: எஸ்.வி. சேகர் மைக்கில் அப்படி என்ன பேசினாரோ தெரியாது... மைக் பத்திக்கிட்டு எறிஞ்சி வெடித்து சிதறியே போயிடுச்சு.
எண்ணூரில் நேற்று அரசு மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு எஸ்.வி. சேகர்தான் சீஃப் கெஸ்ட்!!
பரிசுகள் வழங்கினார்
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு எஸ்.வி.சேகர் பரிசுகளை வழங்கினார். அதற்கு பிறகு மாணவர்களிடையே பேசலாம் என்று மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார்.
டமார் என வெடித்தது
பிள்ளைகளிடம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா பேசிக் கொண்டே இருந்த சமயம் பார்த்து, மேடை அருகே இருந்த ஒலி பெருக்கி சாதனம் திடீரென்று டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
அலறி அடித்து ஓட்டம்
இதை பார்த்த எஸ்.வி.சேகர் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் உறைந்தார். மேடையில் இருந்தவர்களும் பயந்தே போய்விட்டனர். மாணவ, மாணவிகளும் அலறியடித்து கொண்டு மேடையில் இருந்து குதித்து ஓடினர்.
என்னதான் பேசினாரோ?
ஒலிபெருக்கி சாதனம் தீப்பிடித்து எரிந்ததால், அந்த இடமே கரும்புகையாய் இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு அங்க என்ன நடக்குதுன்னே தெரியல. பிறகு பள்ளி ஊழியர்கள் ஓடிச்சென்று மின் இணைப்பை துண்டித்தனர். இப்படி மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒலிபெருக்கி சாதனம் தீப்பிடித்து எரிந்த சம்பவமானது பெரும் பரபரப்பிற்கு உள்ளானது.
மைக்கில் அப்படி என்னதான் பேசியிருப்பார் எஸ்.வி.சேகர்??