ஏலகிரி கோடை விழா... பயங்கர டிராஃபிக் ஜாம்.. மக்கள் பெரும் அவதி!
ஏலகிரி கோடை விழாவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வேலூர்: ஏலகிரி கோடை விழாவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும இயக்கப்படுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வெயிலூரான வேலூருக்கு சற்றே இதமளிக்கும் வகையில் அமைந்துள்ளது ஏலகிரி மலை. கோடைவாசஸ்தலமான இந்த ஊர் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.
வேலூர் ஜோலார்பேட்டை அருகே மலையில் இந்த இடம் உள்ளது. எந்த வித பருவகாலத்திலும் ஒரே மாதிரியான தட்ப வெப்பநிலை இங்கு நிலவுகிறது.
குவியும் சுற்றுலாப் பயணிகள்
இதனால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குவதற்காக சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர்.
ஏலகிரி கோடை விழா
அவர்கள் இங்குள்ள படகு இல்லத்தில் படகுசவாரி செய்து மகிழ்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஏலகிரியில் ஆண்டுதோறும் கோடைவிழா கொண்டாடப்படுகிறது.
குவிந்த பயணிகள்
இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றன.
இன்றுடன் நிறைவு
இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றன. அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து நெரிசல் - அவதி
கோடை விழாவை முன்னிட்டு மக்கள் குவிந்து வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். கோடை விழாவை முன்னிட்டு அரசு முறையாக முன்னேற்பாடுகளை செய்யாததே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.