For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்.. கரூர் காவல் நிலையத்தில் 2 பெண்கள் அடிதடி!

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் மாவட்டத்தில் வாலிபர் ஒருவரை இரண்டு பெண்கள் சொந்தம் கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையின் போது இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாசின் (30). அவருக்கும், கரூரை சேர்ந்த ஜாஸ்மீன் (27), என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே, கரூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ரேணுகா (28). என்ற பெண்ணுடன், பாசினுக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாம். ரேணுகா ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இந்நிலையில், அந்த இரண்டு பெண்களும் பாசினை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி புகார் அளித்துள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து இருதரப்புக்கும் இடையே அடிதடியும் நடந்துள்ளது.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

இந்நிலையில், பாசினின் முதல் மனைவி ஜாஸ்மீன், தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி, கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எஸ்.பி அலுவலத்தில் புகார்

எஸ்.பி அலுவலத்தில் புகார்

இதையடுத்து, ரேணுகாவும், பாசினை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளில் புகார் கொடுத்தார்.

இருதரப்பையும் விசாரியுங்கள்

இருதரப்பையும் விசாரியுங்கள்

இதைத்தொடர்ந்து, இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்கும்படி, கரூர் மகளிர் போலீசாருக்கு, எஸ்.பி.,அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் அடிதடி

காவல் நிலையத்தில் அடிதடி

அதன்படி, நேற்று, பாசின், ஜாஸ்மீன், ரேணுகா ஆகியோர், அவரவர் குடும்பத்துடன் மகளிர் காவல் நிலையத்தில் வந்தனர். அப்போது இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே திடீரென இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

அடிதடியால் பரபரப்பு

அடிதடியால் பரபரப்பு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இரு தரப்பினரையும் விலக்கி விட்டு, அவர்களை தனித்தனியே அமர வைத்து விசாரணை நடத்தினர். இதனால், காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணையின் போது இருதரப்பிலும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

English summary
2 women have given complaint to police station that they would like to live with their husband in Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X