அமைச்சர் ஓ.எஸ் மணியனைக் காணவில்லை.. காவல் நிலையத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு
தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை காணவில்லை என வேதாரண்யம் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாகை: தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை காணவில்லை என வேதாரண்யம் பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக தனி ஒருவராக போர்க்கொடி தூக்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு ஆதரவாக 6 எம்எல் ஏக்கள், 3 எம்பிக்கள், பல முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் அவைத் தலைவர் என வலுவடைந்து வருகிறது.
இதனிடையே எம்.பிக்களும் அடுத்தடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தாவி வருகின்றனர். இதற்கிடையே மறுபக்கம் எம்.எல்.ஏக்களைக் காணவில்லை, அமைச்சர்களைக் காணவில்லை என்று புகார்கள் கிளம்பியுள்ளன. தினசரி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை காணவில்லை என்று வரும் புகார்களால் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.எஸ்.மணியன். தமிழக கைத்தறித் துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் அவரை காணவில்லை என வேதராண்யம் தொகுதி மக்கள் காவல் நிலையித்தில் புகார் அளித்துள்ளனர். விரைவில் அமைச்சரை கண்டுபிடித்து தருமாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.