கும்பகோணம் அருகே 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்.. 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலி
கும்பகோணம் அருகே 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்: 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து நெல்லை செல்லும் பயணிகள் ரயில் இன்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தது. கும்பகோணம் அருகே ரயில் சென்ற போது பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்தார்.
பாபநாசம் - பண்டாரவாடை ரயில் நிலையங்களுக்கு அருகே அரயபுரம் என்ற இடத்தில் தனது மகன் மற்றும் மகள் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன்பாய்ந்தார். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களின் உடல் அரயபுரம் தண்டவாளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த பெண் யார்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.