கணவருடன் தகராறு.. சென்னை தாம்பரம் அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!
சென்னை தாம்பரம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தாம்பரம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பெண் சிரக்ஷா. சென்னை தாம்பரம் அருகே கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சிரக்ஷா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
தான் இறந்துவிட்டால் பெண் குழந்தைகள் கஷ்டப்படும் என்று நினைத்த அவர் முதலில் தனது 5 வயது மகள் ஷ்ரேயா மற்றும் 5 மாத குழந்தை ஜிகானாவை கொலை செய்துள்ளார்.
பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப்பெண்ணின் கணவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.