For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்கால்: நடுக்கடலில் நின்ற 700 டன் எடை கொண்ட கப்பலை கரைக்கு இழுத்து வந்த கஜா!

Google Oneindia Tamil News

Recommended Video

    நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்துவந்து கஜா புயல்

    காரைக்கால்: நடுக்கடலில் நின்ற 700 டன் எடை கொண்ட கப்பலை கரைக்கு இழுத்து வந்த கஜா!

    காரைக்கால்: காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்றிருந்த கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்ததால் அதில் இருந்த ஊழியர்கள் கலக்கம் அடைந்தனர்.

    கடந்த ஒருவாரமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பீதியை ஏற்படுத்தி வந்த கஜா புயல் நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணிக்கு கரையை கடந்தது. அப்போது வேதாரண்யம், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

    இந்த புயல் நேற்று அதிகாலை கரையை கடக்கும் வரை 7 மாவட்டங்களை புரட்டி போட்டது. வேதாரண்யம் தற்போது குட்டித் தீவாக காட்சி அளிக்கிறது.

    [கஜாவின் கோர தாண்டவம்.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?]

    7 ஊழியர்கள்

    7 ஊழியர்கள்

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு ஒரு தனியார் கப்பல் தூர்வாரும் பணிக்காக வந்தது. அந்த கப்பலில் கேப்டன் உள்பட 7 ஊழியர்களும் பணியில் இருந்தனர்.

    நிறுத்திய கப்பல்

    நிறுத்திய கப்பல்

    அப்போது துறைமுகப் பகுதியில் தூர்வாரும் பணிகளை முடித்துக் கொண்டு அந்த கப்பல் 15 நாட்களுக்கு முன்பாகவே காரைக்காலில் இருந்து புறப்பட்டு சென்றது. அடுத்த சில பணிகளுக்காக காரைக்கால் அருகே நடுக்கடலில் கப்பலை நிறுத்தி வைத்திருந்தனர்.

    பீதி

    பீதி

    கஜா புயல் கரையை கடந்த போது நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மும்பை கப்பலை, கரையை நோக்கி இழுத்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் கப்பலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் புயலின் வேகம் காரணமாக, கப்பல் இழுத்து செல்லப்பட்டதால் ஊழியர்கள் பீதி அடைந்தனர்.

    நள்ளிரவு சம்பவம்

    நள்ளிரவு சம்பவம்

    ஒரு வழியாக அந்த கப்பல் காரைக்கால் அருகே மேலவாஞ்சூர் கடற்கரையில் நின்றது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. புயலால் நடுக்கடலில் இருந்து கரைக்கு இழுத்து வரப்பட்ட கப்பலை சுற்று வட்டார கிராம மக்கள் பார்த்து சென்றனர்.

    English summary
    Cyclone Gaja sweeps the ship which was in Deep sea to the banks of the Karaikkal coast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X