For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் ஹோட்டல் கட்டடம் இடிந்து 2 பேர் பலியான சம்பவம்- 6 பேர் கைது
சென்னையில் ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை சேத்துபட்டில் புதிதாக கட்டடப்பட்டு வரும் ஹோட்டலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சேத்பட்டு ஸ்பர்டேங்க் சாலையில் 4 மாடி கொண்ட புதிய ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்திலேயே கட்டடம் கட்டும் பணியாளர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை இந்த கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த பணியாளர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் பொறியாளர்கள் மீனாட்சிநாதன், ராமகிருஷ்ணன், பாதுகாப்பு அதிகாரி மகாராஜன்,
ஊழியர்கள் வெங்கடேன், மேகராஜ் ஜோஷி, பப்புகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Comments
English summary
A building of newly constructing hotel building collapses and 2 were died in this incident in Chennai and 6 were arrested on this incident.
Story first published: Thursday, May 31, 2018, 20:15 [IST]