For Daily Alerts
Just In
சென்னை அருகே மழை நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!
சென்னை அருகே மழை நீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பூவிருந்தவல்லியில் மழை நீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டியது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
பூவிருந்தவல்லி அருகே மாங்காடு சீனிவாச நகரில் தேங்கியிருந்த மழை நீர் இதுவரை வடியாமல் இருந்தது. இந்நிலையில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 65வயது மதிக்கதக்க முதியவர் உயிரிழந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த வாரம் மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் எதிரே தேங்கிய மழை நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
A old man died after drain in rain water near in Poonamalli. Rain water logging in Mangadu surrounding place.
Story first published: Saturday, November 11, 2017, 10:04 [IST]