For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞரை கைது!

விருதுநகர் அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

விருதுநகர்: பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை தாலுகா நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் பாண்டி, விறகு வியாபாரி. இவரது மனைவி வனிதா. இவர்களிடம் விறகு விற்க வருபவர் பாக்கியராஜ். இடையமேலூரைச் சேர்ந்த இவர், விறகுகளை வெட்டி விற்று வந்தார். விறகுகளை வழக்கமாக இவர்களது கடைக்கு கொடுப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

A person have been arrested by the police for talking Obscenity to a woman

விறகுகளை விற்க வரும்போது வனிதாவுடன் பேசுவார். அவரும் இடைய மேலூரைச் சேர்ந்தவர் என்பதால் பாக்கியராஜுடன் சகஜமாக பேசியுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட பாக்கியராஜ், செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனை வனிதா தனது கணவர் பாண்டியிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் பாக்கியராஜை கூப்பிட்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தனது செயலை நிறுத்தாததால் சிவகங்கை தாலுகா போலீசில் வனிதா புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாக்கியராஜை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A person have been arrested by the police for talking Obscenity to a woman in Virudunagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X