For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணக்குப் பிள்ளைக்கு திடீர் செக் வைத்த டெல்லி... குஷியில் சட்டாம் பிள்ளை

பஞ்சாயத்து செய்து வந்த கணக்குப் பிள்ளையின் கணக்குகளை முடித்துவிட்டதாம் டெல்லி. இதனால் சட்டாம்பிள்ளையார் செம குஷியாக இருக்கிறாராம்

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகமே தம் கையில்தான் என்பதை பகிரங்கப்படுத்த விரும்பியதால் கணக்குப் பிள்ளை வசம் ஒப்படைத்த கணக்கு வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டதாம் டெல்லி. இதனால் சட்டாம்பிள்ளை தரப்பு படுகுஷியில் இருக்கிறதாம்.

கணக்குப் பிள்ளைக்கு மூத்தவர் இருந்தவரை அரசல் புரசலாக மத்தியஸ்த வேலைகளை செய்து வந்தார். அவர் மறைந்ததுதான் தாமதம்.

கட்ட பஞ்சாயத்து

கட்ட பஞ்சாயத்து

அவரை விஞ்சிய திறமை தம்மிடம் உண்டு என கதகளி ஆடினார். நீண்டகால கணக்குப் பிள்ளை என்பதால் டெல்லியும் பவ்யம் காட்டியது. பங்காளிகளுக்கு திரைமறைவாக கட்ட பஞ்சாயத்தை நடத்தியும் வந்தார் கணக்குப் பிள்ளை.

ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ்

ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ்

இந்த பஞ்சாயத்து பேசிக் கொண்டே தமக்கான பல விஷயங்களையும் சைக்கிள் கேப்பில் சாதித்தும் கொண்டாராம் கணக்கார். பங்காளிகள் பிரச்சனை இழுபறியான நிலையில் வெளிப்படையாகவே பஞ்சாயத்தை நடத்த ஊடகங்களிலும் அது பிரேக்கிங் நியூஸானது.

கணக்கு பிள்ளை கணக்கு முடிப்பு

கணக்கு பிள்ளை கணக்கு முடிப்பு

இதனால் டெல்லிக்கு ஏகப்பட்ட நெருக்கடியாகிவிட்டது. இவரை நம்பி ஒப்படைச்சா நம்மையே நாசமாக்கிட்டாரே என நாசூக்காக நாங்க சொல்லுகிற வரை உங்க சைடு தகவல் எங்களுக்கு வேண்டாம் என சொல்லிவிட்டதாம். கணக்குப் பிள்ளையின் கணக்கு முடிக்கப்பட்டு இருப்பதால் உள்ளூர்வாசிகளுக்கு உள்ளூர மகிழ்ச்சி.

ஜாலி சட்டாம் பிள்ளை

ஜாலி சட்டாம் பிள்ளை

இவர்களை விட கணக்குப்பிள்ளையோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற சட்டாம்பிள்ளைக்குத்தான் செம குஷியாம். அப்படியே உள்ளூர் நாட்டாமை பஞ்சாயத்தை நமக்கு தந்தா நல்லா இருக்குமே என துண்டு போடவும் தொடங்கியிருக்கிறாராம் சட்டாம் பிள்ளை.

English summary
Here is the one more political gossip on TamilNadu Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X