For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவை மத்திய சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு கைதி காளிமுத்து பரிதாப மரணம்
மாரடைப்பு ஏற்பட்டு கைதி ஒருவர் கோவை சிறையில் உயிரிழந்தார்.
கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூரை அடுத்த மடத்துக்குளம், கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
பின்னர் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை மத்திய சிறையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உடல் நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஐந்து கைதிகள் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
A prisoner dies in Coimbatore Prison due to Severe heart attack.