For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் எரிந்து சாம்பல்.. போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று எரிந்து சாம்பலானது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே சொகுசு பேருந்து எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயமின்றி உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 45 பயணிகள் இருந்தனர். அப்போது அந்த வாகனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.

A private luxury bus caught fire near Ulundhurpet

பின்னர் அங்கும் இங்கும் ஓடினர். இதைத் தொடர்ந்து பஸ்ஸின் ஓட்டுநர் மிகவும் சாமர்த்தியத்துடன் பஸ்ஸை இயக்கி 45 பயணிகளையும் காப்பாற்றினார். அவர்களுக்கு சிறுகாயம் கூட இல்லாமல் காப்பாற்றியது பயணிகளிடையே நெகிழ்ச்சியை தந்தது.

இதைத் தொடர்ந்து பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதனால் முக்கிய சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ. வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏசி இயந்திரத்தால் தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A bus which has 45 passengers that plies from Trichy to Chennai, caught fire near Ulundhurpet Tollgate. Fortunately, passengers were safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X