For Quick Alerts
For Daily Alerts
Just In
வேலூர் அருகே கொடுமை.. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் பள்ளி வேன் மோதி பலி
வேலூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
Recommended Video
4 வயது சிறுவன் பள்ளி வேன் மோதி பலி-வீடியோ
வேலூர்: தனியார் பள்ளி வாகனம் மோதியதில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வேலூர் மாவட்டம் காவேரி பாக்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பிரவீன்குமார். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வரும் இந்த சிறுவன் இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று சிறுவன் பிரவீன்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு உடடினயாக கொண்டு செல்லப்பட்டான்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
A private school van hit four years old boy in Vellore. The boy is dead while taking to hospital.