For Daily Alerts
Just In
அந்தமானில் இருந்து 250 பேருடன் சென்னை வந்த பயணிகள் கப்பல் நடுக்கடலில் பாறையில் மோதி விபத்து!
அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் கப்பல் நடுக்கடலில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை: அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் கப்பல் நடுக்கடலில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரில் இருந்து 250 பயணிகளுடன் ஸ்வராஜ் என்ற கப்பல் சென்னைக்கு புறப்பட்டது.
போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் நிக்கோபர் வந்தது. அப்போது நடுக்கடலில் இருந்த பாறையில் மோதி கப்பல் விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து கடற்படை கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இந்த விபத்தில் கப்பலில் பயணித்த 250 பயணிகளும் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments
English summary
A ship met with an accident in middle of the sea. Ship started from Andaman to chennai with 250 passengers hits on rock in middle of the sea.