For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரம்: தாயை கொன்று புதைத்த மகன்.. 2 மாதங்களுக்கு பிறகு அம்பலமான உண்மை

மயிலாடுதுறை அருகே மனைவியுடன் தகராறு செய்த தாயை மகனே அடித்துக்கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: மனைவியுடன் தகராறு செய்த தாயை மகனே அடித்துக்கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு ஆண்பிள்ளைகள் மாறிவிடுவார்கள், மனைவியின் சொல்படிதான் நடப்பார்கள், பெற்றவர்களை மறந்துவிடுவார்கள் என்ற பேச்சு சமூகத்தில் பரவலாக உள்ளது.

அதற்கேற்றார் போல் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் ஆதரவற்று விடப்படுவதும், தெரியாத ஊரில் கொண்டு போய் விட்டு விட்டு பிள்ளைகள் சொல்லிக்காமல் வருவதும் அதிகரித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

நெஞ்சை உலுக்கும் சம்பவம்

நெஞ்சை உலுக்கும் சம்பவம்

சாலையோரங்களில் ஆதரவற்று சாப்பாட்டுக்கு கையேந்தும் முதியவர்களில் பலர் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பெற்ற பிள்ளை செய்த ஒரு காரியம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

தாய் உய்யம்மாள்

தாய் உய்யம்மாள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உய்யம்மாள். இவரது மகன் கலியமூர்த்தி. இவருக்கு வயது 55.

திருமணத்திற்கு பின்

திருமணத்திற்கு பின்

கலியமூர்த்திக்கு பூசம் என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். கலியமூர்த்தியின் திருமணத்திற்கு பிறகு வீட்டில் தொடர்ந்து பிரச்சனை வெடித்துள்ளது.

மாமியார் மருமகள் சண்டை

மாமியார் மருமகள் சண்டை

மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏகபொருத்தமாக இருந்துள்ளது. ஆகாத மருமகள் கைப்பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என மாமியாரும், மாமியாரால் தனது நிம்மதி போயிவிட்டதாக மருமகளும் நாள்தோறும் முடியை பிடித்துக்கொள்ளாத குறையாக சண்டைபோட்டு வந்துள்ளனர்.

முற்றுப்புள்ளி வைக்க முடிவு

முற்றுப்புள்ளி வைக்க முடிவு

பல ஆண்டுகளாக தொடரும் அவர்களின் சண்டையால் தெருவே அல்லோகலப்பட்டுள்ளது. இதனால் நிம்மதியை இழந்த கலியமூர்த்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.

தாய் கொன்று புதைப்பு

தாய் கொன்று புதைப்பு

ஒரு கட்டத்தில் மாமியார் மருமகள் சண்டை முற்றவே தாயை அடித்துள்ளார் கலியமூர்த்தி. இதில் கீழே விழுந்த உய்யம்மாள் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆட்டுடன் சேர்த்து..

ஆட்டுடன் சேர்த்து..

விஷயத்தை மறைக்க முடிவு செய்த கலியமூர்த்தி மனைவியுடன சேர்ந்து வீட்டு தோட்டத்திலேயே தாயை புதைத்துள்ளார். அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்கு ஆடு ஒன்று இறந்து போயிவிட்டதாக கூறி ஆட்டுடன் சேர்த்து தாயை புதைத்துள்ளார்.

உண்மையை கக்கிய மகன்

உண்மையை கக்கிய மகன்

இதைத்தொடர்ந்து தனது தாயை காணவில்லை என ஊர் மக்களிடம் கூறியுள்ளார். இதனை நம்பாத கிராம மக்கள் அவரை மிரட்டி விசாரித்ததில் உண்மையை கக்கியுள்ளார்.

கண்டுபிடித்த மக்கள்

கண்டுபிடித்த மக்கள்

இதையடுத்து மகன் கலியமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயை கொன்று புதைத்துவிட்டு காணாமல் போனதாக மகனே நாடகமாடியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து மகன் கலியமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உய்யமாளின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

வட்டாட்சியர், மருத்துவர்கள் முன்னிலையில் உய்யமாளின் உடல் தோண்டி எடுக்கப்படவுள்ளது. தாயை கொன்று புதைத்துவிட்டு காணாமல் போனதாக மகனே நாடகமாடியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A son kills mother for fighting with wife. Son buried mothers body and said she is missing. After two months of the complaint police have found the body and arrested the son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X