பழனி அருகே வேன் மீது லாரி மோதி கோர விபத்து.. கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
Recommended Video
திண்டுக்கல்: பழனி அருகே மாருதி ஆம்னி மீது லாரி மோதியதில் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, சித்தலவாடம்பட்டியில் நள்ளிரவில் நடந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர்.
பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த 6 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோட்டையத்தை சேர்ந்த அவர்கள், பழனி கோயிலுகு வந்துவிட்டு திரும்பியபோது, இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதியதால், வேன் அப்பளம் போல நொறுங்கியது. ரத்த வெள்ளத்தில், அதில் பயணித்தவர்கள் அதே இடத்தில் இறந்து கிடந்த காட்சி காண்போர் நெஞ்சங்களை பதறச் செய்வதாக இருந்தது. அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து தடை பட்டது.
இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.