பின்ன என்னங்க எவ்வளவு அடிச்சாலும் கம்ப்யூட்டர் வேலை செய்யலனா டென்ஷன் ஆகாதா!
நீண்ட நாள்களாக போராடியும் கணினி சரிவர இயங்காததால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் அதை தூக்கி எரிந்து துவம்சம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை: நீண்ட நேரமாக மல்லு கட்டியும் தன் பொறுமையை இழந்த ஊழியர் ஒருவர் சரிவர பணி செய்யாத கணினியை தூக்கி வீசிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இன்றைய அவசர உலகில் அதுவும் கணினிமயமாக்கப்பட்ட நிலையில் அனைத்தும் விரைந்து செயல்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். என்னதான் இயந்திரமாக இருந்தாலும் அதுவும் நம் வேகத்துக்கு பணியாற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அதற்குரிய புதுவகை பிராசஸர், ரேம், ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றை போட வேண்டும். பொதுவாக அரசு அலுவலகங்களில் பெரிய டப்பா கணினிகளை வைத்தே பணியாற்றுகின்றனர். ஒரு ஊழியர் ஒருவர் கணினியுடன் எத்தனை நாள்களாக மல்லுக்கட்டி வருகிறாரோ தெரியவில்லை.
பின்ன என்னங்க எவ்வளவு அடிச்சாலும் கம்ப்யூட்டர் வேலை செய்யலனா டென்ஷன் ஆகாதா! https://t.co/IZGhcVgxc6 #employees #Computers #angry pic.twitter.com/ILGSEkoPED
— Oneindia Tamil (@thatsTamil) September 4, 2017
தன் பொறுமையை இழந்து கணினியை தூக்கிவீசும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவரது சக ஊழியர் அவரை ஆச்சரியத்துடன் பார்ப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.