பிறந்த நாள் அன்று காதலியை சுட்டுக் கொன்ற காவலர்.. விழுப்புரம் அருகே பரபரப்பு!
விழுப்புரம் அருகே காவலர் ஒருவர் தனது காதலியை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
விழுப்புரம்: விழுப்புரம் அருகே காவலர் ஒருவர் தனது காதலியை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்வேல் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் சொந்த ஊரான செஞ்சியில் சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
[இந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார்: மதுரை ஐகோர்ட் கேள்வி]
பிறந்தநாள் இன்று
இன்று சரஸ்வதிக்கு பிறந்தநாள். இதனால் நேற்று சென்னையில் இருந்து கிளம்பி காவலர் கார்த்திக்வேல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்திற்கு வந்துள்ளார். இன்று சரஸ்வதியும், கார்த்திக்வேலும் சந்தித்து இருக்கிறார்கள்.
கொலை செய்தார்
இந்த நிலையில் இன்று காலை சரஸ்வதியை சந்திக்க சென்ற கார்த்திக், அங்கு சரஸ்வதியை கொலை செய்துள்ளார். துப்பாக்கியால் சரஸ்வதி தலையில் சுட்டு கொலை செய்தார். இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சண்டை
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவர்களுக்கு இடையில் சிறிய சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சண்டை பெரிதாகி வாக்குவாதம் முற்றியுள்ளது. அதன் முடிவில் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை நடந்து வருகிறது
ஆனாலும் இந்த கொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இது ஏன் நடந்தது என்று தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். மருத்துவக் கல்லூரியில் சரஸ்வதி, 3ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.