திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்வு
திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை: சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் சீனிவாசன் என்ற மருத்துவருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை கட்டும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தது. இதில் 5 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த மருத்துவமனைக்கு அருகே பில்லூரார் மடம் என்ற பழமை வாய்ந்த மடம் ஒன்று உள்ளது. இன்று காலை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது, மடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
இந்த இடிப்பாட்டில் சிக்கி ரமேஷ், அலமேலு என்ற 2 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடிப்பாட்டில் சிக்கிய லட்சுமணன் என்பவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தீயணைப்பு வீரர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இடிபாடுகளில் இருந்து லட்சுமணனின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.