சென்னையில் நகைக்காக நட்பாகி பெண் தலையை துண்டித்து கொலை.. மளிகைக்கடைக்காரர் கைது!
சென்னையில் நகைக்காக நட்பாக பழகி பெண் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அம்பத்தூரில் நகைக்காக நட்பாக பழகி பெண் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் ரேவதி என்ற பெண் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளளார். அவருக்கு அப்பகுதியில் உள்ள மாரியப்பன் என்ற மளிகைக் கடைக்காரருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
தேவதியிடம் தங்க நகைகள் இருப்பதை தெரிந்துக்கொண்ட மாரியப்பன் அவர் மீது அதிக அக்கறை இருப்பது போல் நடித்துள்ளார். இதனை நம்பி ரேவதியும் அவருடன் நட்பு பாராட்டியுள்ளார்.
கத்தியால் குத்தி கொலை
இந்நிலையில் மாரியப்பன் ரேவதியை வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் கோவிலில் இருந்து திரும்பிய போது மாரியப்பன் ரேவதியை தான் பதுக்கி வைத்திருந்த கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
மடக்கிப் பிடித்த போலீஸ்
பின்னர் ரேவதி அணிந்திருந்த நகைகள், அவரின் கைப்பை, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்ட மாரியப்பன் அவரின் தலையை துண்டித்து உடலை முட்புதரில் வீசிச்சென்றுள்ளார். இந்நிலையில் கொலையாளியை தேடி வந்த போலீசார் மாரியப்பனை மடக்கிப் பிடித்தார்.
நகைக்காக கொலை - ஒப்புதல்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரேவதியை நகைக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்த நகைகள், கைப்பை, செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் அதிர்ச்சி
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நகைக்காக பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.