For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக் காதலுக்கு இடையூறு: மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவன்

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

கோவை: கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கோவை அருகே கூலிப்படையை ஏவி கணவரே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த குழந்தைவேலு, மின்வாரியத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர் கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார்.

கள்ளக் காதல்

கள்ளக் காதல்

குழந்தைவேலுக்கு கள்ளக் காதலி ஒருவர் இருக்கிறார். இந்த விவகாரம் மனைவி ரேணுகாவுக்கு தெரியவர வீட்டில் தினமும் ஒரே களேபரம்தான்.

ராஜபாளையம் கூலிப்படை

ராஜபாளையம் கூலிப்படை

இதனால் ஆத்திரமடைந்த குழந்தைவேலு மனைவியை கொல்ல மதுரை ஏஜெண்ட் ஒருவர் மூலம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார். அத்துடன் மனைவியை எப்படி போட்டுத் தள்ள வேண்டும் என ஸ்கெட்ச் போட்டும் கொடுத்திருக்கிறார் குழந்தைவேலு.

நடித்த கணவர்

நடித்த கணவர்

தொண்டாமுத்தூரில் இருந்து மாதம்பட்டி செல்லும் சாலையில் ஆள்நடமாட்டம் பகுதியில் வைத்து ரேணுகாவை கூலிப்படை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறது. முதலில் மனைவியின் சடலத்தைப் பார்த்து குழந்தை அழுது நடித்திருக்கிறார்.

நடிப்பால் சிக்கினார்

நடிப்பால் சிக்கினார்

ஆனால் ஸ்கெட்ச் போட்டுத்தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த போலீஸ் குழந்தைவேலுவிடம் துருவி துருவி விசாரித்தது. இதனால் வேறுவழியில்லாமல் எல்லா உண்மைகளையும் ஒப்புக் கொண்டார் குழந்தைவேலு. இப்போது ராஜபாளையம் கூலிப்படையினர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
A woman was murdered by her husban over illicit affair near Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X