பிரேத பரிசோதனை செய்த உடலை ஒப்படைக்க லஞ்சம்.. கோவை அரசு மருத்துவமனையில் அரங்கேறும் அதிர்ச்சி
கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை: அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் பரமசிவம். இவர் இறந்தவர்களின் உடலை போஸ்ட் மார்டம் முடிந்து வாங்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு தகராறு செய்வதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த உடலை பெறவந்த உறவினர் ஒருவரிடம் 3000 ரூபாய் கேட்டு அவர் தகாராறு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பணம் கொடுத்தால்தான் பிணத்தை வெளியில் எடுக்க கையெழுத்து போடுவேன் என்று அதிகாரம் செய்கிறார் அந்த ஊழியர்.
ஒரு சிலர் பணமில்லாமல் குறைந்த பணத்தை கொடுத்து உடலை கேட்டால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உடலை கொடுக்க மறுக்கிறார். அருகில் உள்ள காவலரோ நடப்பது அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறார்.
பரமசிவம் இதற்கு முன் இதே புகாரில் சிக்கி மறுபடியும் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தாரிடம்