கோவையில் அதிர்ச்சி.. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர் மோதி இளைஞர் பலி
கோவையில் அதிமுக பேனர் மோதியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: அவினாசி அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் மோதி ரகு என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விழாவுக்காக அலங்கார வளைவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலங்கார வளைவில் மோதி பைக்கில் சென்றவர் உயிரிழந்துள்ளார். அலங்கார வளைவில் இருந்த மூங்கில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
நீட்டிக்கொண்டிருந்த மூங்கில் மீது ரகுவின் பைக் நேற்றிரவு மோதியது. இதில் ரகு சம்பவ இடத்திலேயே பயலியானார். இதையடுத்து பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தடையை மீறி பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார். பேனர் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.