For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவாரூர் அருகே பரபரப்பு.. பேசிக்கொண்டிருந்தபோது ஐபோன் வெடித்து சிதறி இளைஞர் படுகாயம்

திருவாரூர் அருகே ஐ போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

Google Oneindia Tamil News

திருவாரூர்: பேசிக்கொண்டிருந்தபோது ஐபோன் திடீரென வெடித்து சிதறியது. இதில் சச்சின் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் முகந்தனூரைச் சேர்ந்தவர் சச்சின. இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை பயன்படுத்தி வந்துள்ளார்.

A youth injured near in Thiruvarur when a I phone blast while talking

இந்நிலையில் இன்று அவர் தனது ஐபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஐ போன் திடீரென வெடித்து சிதறியது.

இதில் முகம் மற்றும் காதுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த சச்சினை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருவாரூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதி நவீன, அதிக விலைமிக்க, அட்வான்ஸ்டு மாடல், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என கூறப்படும் ஐ போன் வெடித்து சிதறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A youth injured near in Thiruvarur when a I phone blast while talking. The injured youth has admitted in the privae hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X