For Daily Alerts
Just In
மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண் சேர்ப்பு - வீடு வீடாக சேகரிக்கப்போகும் தமிழக அரசு!
சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண்ணை சேர்க்க வீடு வீடாக தகவல் சேகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்த அரசு செய்திக்குறிப்பில், "தேசிய அடையாள அட்டை விதி 2008ன் படி தேசிய மக்கள்தொகை கணக்கு பதிவேட்டை மேம்படுத்தவும், அந்த பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றி தகவல் சேகரிப்பதற்கு மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசும் தேசிய மக்கள் தொகை கணக்கு பதிவேட்டை மேம்படுத்தவும், அதில் ஆதார் எண்ணை இணைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்கும் பணியினை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Aadhar number will add in population register soon by collecting from homes directly.
Story first published: Friday, December 25, 2015, 14:23 [IST]