ஆடிப்பெருக்கு: காவிரியில் பொங்கும் வெள்ளம்.. 1000க்கும் அதிகமான போலீஸ் குவிப்பு
தமிழகம் முழுக்க இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகம் முழுக்க இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகம் முழுக்க இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. சென்ற ஆண்டை போல இல்லாமல் இந்த வருடம் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. காவிரியில் ஆடி மாதத்தில் வரும் தண்ணீரை வணங்கும் விதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் இருந்தே மக்கள் தற்போது காவிரி கரையில் கூடி வருகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பூஜை பொருட்களுடன் வந்து விழாவை கொண்டாடி வருகிறார்கள்.
டெல்டா மாவட்டங்களில் விழாவை கொண்டாட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது ஆடிப்பெருக்கு விழா. பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மூன்று நாட்கள் விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் காவேரி கரையில் 1000க்கும் அதிகமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் வெள்ளம் செல்வதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவசரகால உதவி வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஆடிப்பெருக்கை பாதுகாப்பாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.