சென்னை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்டக் குழந்தை சேலத்தில் மீட்பு - வீடியோ
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை சேலத்தில் போலீசார் மீட்டனர்.
சென்னை: சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை சேலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்டது. அக்குழந்தை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் குழந்தை ஆகும்.
குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதனை வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தனர்.
அதில் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்த சுமித்ரா என்பவரும் கடத்தலுக்கு உதவி புரிந்துள்ளார். அதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை சேலத்தில் இருப்பது தெரியவந்தது. சேலம் சென்ற போலீசார் அங்கு மணிமேகலை என்பவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். மேலும் மணிமேகலை, சுமித்ரா மற்றும் இருவரை போலீசார் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்தனர்.
சமீபகாலமாக, தமிழகம் முழுவதும், குழந்தை கடத்தல் பெரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.