சிறையில் மயங்கி விழுந்த அபிராமி.. 4 நாட்களாக சரியாக சாப்பிடவில்லையாம்!
Recommended Video
சென்னை: கடந்த 4 நாட்களாக ஏற்பட்ட மன அழுத்தம், உணவு உண்ணாமை காரணமாக அபிராமி நேற்று இரவு சிறையிலேயே மயங்கி விழுந்ததாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் குழந்தைகள் இருவரையும் கடந்த 31-ஆம் தேதி அபிராமி கொன்றுவிட்டு திருவனந்தபுரத்துக்கு தப்பியோடினார். இதையடுத்து அபிராமியை நாகர்கோவிலுக்கு வரவழைத்த போலீஸார் கைது செய்தனர்.
கண்டனம்
இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர்.
அழுத அபிராமி
சிறையில் கடந்த 4 நாட்களாக யாருடனும் அபிராமி பேசுவதில்லை. யாராவது பேசினாலும் அவர்களிடம் முகம் கொடுத்து கூட அவர் பேசுவதில்லை. மேலும் சக கைதிகளும் அவரை சூழ்ந்து கொண்டு கதை கேட்கின்றனராம்.
தொல்லை தாங்க முடியல்
தொடர்ந்து இவர்கள் கதை கேட்டு நச்சரித்து கொண்டே இருப்பதால் தன்னால் சக கைதிகளின் தொல்லை தாங்க முடியவில்லை என்பதால் தன்னை தனிச்சிறையில் அடைக்குமாறு அபிராமி ஜெயிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
4 நாட்களாக அழுத்தம்
இந்நிலையில் நேற்று இரவு அபிராமி சிறையில் மயங்கி விட்டார். இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவரை காண்பித்த போது அவர் கடந்த 4 நாட்களாக உண்ணாமல், தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதால் இந்த மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். "குழந்தைகளை கொன்றுவிட்டேனே காமம் என் கண்ணை மறைத்து விட்டதே" என கைது செய்யப்பட்ட போது போலீஸிடம் அபிராமி அழுதது குறிப்பிடத்தக்கது.