அடிச்சதேயில்லையாம்.. இரு பிள்ளைகளையும் பூ போல பார்த்துக் கொண்ட அபிராமிக்கு கொலை வெறி வந்தது எப்படி?
Recommended Video
சென்னை: இதுவரை ஒரு முறை கூட குழந்தைகளை அடிக்காத அபிராமிக்கு அவர்களை கொல்ல எப்படிதான் மனம் வந்ததோ தெரியவில்லை.
குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் வசிப்பவர் விஜய். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். அபிராமி சென்னை வடபழனியில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அங்கு பணி செய்ய வந்த விஜய்க்கும் அபிராமிக்கும் இடையே காதல் மலர்ந்து பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் திருமணம் செய்து கொண்டனர். இனிதாக இருந்த இவர்களது வாழ்வில் கள்ளக்காதல் என்ற சுனாமி வந்தது.
கைது
இதன் விளைவு இரு குழந்தைகளையும் வாரி எடுத்து சென்றது. ஆம் கள்ளக்காதலுக்காக இடைஞ்சலாக இருந்த இரு குழந்தைகளையும் கொன்று விட்டார் அபிராமி. இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பிய அவரை நாகர்கோவிலில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
ஸ்கூட்டி பரிசு
இந்நிலையில் அபிராமி குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. அபிராமி இதுவரை இரு குழந்தைகளையும் அடித்ததே இல்லையாம். எப்போதும் அன்பாக பார்த்துக் கொள்வாராம். தினமும் அஜய்யை பள்ளிக்கு கொண்டு செல்வாராம். இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக அவருக்கு ஸ்கூட்டியை விஜய் வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஸ்கூட்டியில் உலா
இதிலிருந்துதான் அவரது குடும்பத்துக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. எப்போது பார்த்தாலும் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு பியூட்டி பார்லர் செல்வதும் அனைவரிடமும் பேசி ஊர் சுற்றுவதையுமே வேலையாக கொண்டிருந்தார். அந்த பகுதியில் விஜய்யை காட்டிலும் அபிராமியைதான் எல்லாருக்கும் தெரியுமாம்.
பூப்போல் பார்த்து கொண்டார்
அஜய், கார்னிகா ஆகியோரை அபிராமி பூப்போல் பார்த்து கொண்டார். இதுவரை அவர்களை அடித்ததே இல்லையாம். அப்படி அபிராமிக்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ய எப்படி மனம் வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.