பிரியாணி என்றால் எனக்கு உயிர்... இரு குழந்தைகளின் உயிரை குடித்த அபிராமி பரபர தகவல்
Recommended Video
சென்னை: குன்றத்தூரில் இரு குழந்தைகளை கொலை செய்த அபிராமி தனக்கு பிரியாணி என்றால் உயிர் என்று போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவருக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார். இதையடுத்து பைக்கை கோயம்பேட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் தப்பி சென்றார்.
வீட்டுக்கு ஆர்டர்
அவரை நாகர்கோவிலுக்கு வரவழைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில் எனக்கு பிரியாணி என்றால் உயிர். அதனால் எப்போதும் கடைகளில் பிரியாணியை ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன்.
பிரியாணி டெலிவரி
அதுபோல் குன்றத்தூரில் சுந்தரம் பணியாற்றும் பிரியாணி கடைக்கு என் கணவர் என்னையும் குழந்தைகளையும் கூட்டிச் சென்றார். அந்த கடையின் பிரியாணி எனக்கு பிடித்துவிட்டது. இதனால் அவ்வப்போது அங்கிருந்து ஆர்டர் செய்வேன். பிரியாணியை டெலிவரி செய்ய சுந்தரம்தான் எங்கள் வீட்டுக்கு வருவார்.
உல்லாசம் அனுபவிப்போம்
அவ்வாறு வரும் போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது நெருக்கமாக மாறியது. இதனால் எனக்கு கூடுதலாக பிரியாணி வைத்து கொண்டு வருவார். விஜய் இல்லாத நேரங்களில் பிரியாணி கொண்டு வரும் போது நாங்கள் உல்லாசமாக இருப்போம்.
புத்திமதி
என் கணவரும் என்னை கவனிக்காமல் வேலை வேலை என்று இரவு நேரங்களில் கூட வீட்டுக்கு வராமல் இருந்தார். அந்த சந்தோஷம் எனக்கு சுந்தரத்திடம் அதிகமாகவே கிடைத்தது. அதனால் நாங்கள் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்தே தங்கியிருந்தோம். பின்னர் உறவினர்கள் புத்திமதி சொல்லி என்னை அழைத்து சென்றனர். ஆனால் என்னால் அவரை மறக்கமுடியாமல் தவித்தேன் என்றார் அபிராமி.