சென்னையில் ஆக்சென்சர், இன்போசிஸ் அபீஸுக்குள் பெருக்கெடுத்தும் ஓடும் வெள்ளம்
சென்னை: சென்னையில் உள்ள ஆக்சென்சர் மற்றும் இன்போசிஸ் நிறுவன அலுவலகங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை, கடலூர் மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சென்னையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் வெள்ளநீரை பார்த்து பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்து வருகிறார்கள்.
ஐடி நிறுவனங்கள்
சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
ஆக்சென்சர்
ஆன்சென்சர் நிறுவனத்திற்குள் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது. வெள்ளத்தில் மாடிப் படியில் ஊழியர்கள் ஏறி வரும் காட்சி.
லிப்ட்
ஆக்சென்சர் அலுவலகம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. லிப்ட் இருக்கும் பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இன்போசிஸ்
சென்னையில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்திற்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.