For Daily Alerts
Just In
கோவையில் கோர விபத்து... கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி
கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
Recommended Video
கோவையில் ஏற்பட்ட விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு- வீடியோ
கோவை: நீலாம்பூர் புறவழிச்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் கோகுல்நாத், சிதம்பரநாத், கவுதம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேரும் சூளுர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார்கள் வேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. விபத்துக்களை தடுக்க நீலாம்பூர் புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
English summary
Accident in Coimabatore kills three college students. Six injured has admitted in hospital.
Story first published: Saturday, August 4, 2018, 13:11 [IST]