For Quick Alerts
For Daily Alerts
Just In
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோர விபத்து: 4 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: காடனேரி விலக்கு என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி விலக்கு என்ற இடத்தில் செங்கல் ஏற்றிச்சென்ற லாரி சரக்கு ஆட்டோவின் மீது மோதியது.
இதில் சரக்கு ஆட்டோவில் சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் நான்கு பேர் வத்திராயிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் விபத்துக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Accident near in Srivilliputhur killed four on the spot. injured four has been admitted in the hospital.
Story first published: Monday, January 22, 2018, 10:40 [IST]