For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூர் அருகே விபத்து: மலைவாழ் மக்கள் 5 பேர் பலி, சேமித்த காட்டுப்பொருட்களை விற்க சென்றபோது சோகம்

திருப்பூர் அருகே வேன் கவிழ்ந்து மலைவாழ் கிராமத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பூர் அருகே விபத்து: மலைவாழ் மக்கள் 5 பேர் பலி-வீடியோ

    திருப்பூர்: உடுமலை அருகே வேன் கவிழ்ந்து மலைவாழ் கிராமத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகே குருமலை, குழிப்பட்டி மற்றும் மாவடப்பு ஆகிய மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த கிராமங்களை சேர்ந்த 17 பேர் நேற்று மாலை தாங்கள் சேமித்த சிறுகாட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கு உடுமலை நகர் பகுதிக்கு சென்றனர்.

    Accident near in Thirupur kills five

    பின்னர் தங்களின் ஊர்களுக்கு திரும்பிய அவர்கள் குழிப்பட்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான வேனில் புறப்பட்டுள்ளனர். இரவு 11 மணியளவில் கோவை மாவட்டம் காடம்பாறை காவல்நிலைய சரகம் மரப்பாலம் அருகே உள்ள வளைவில் வந்தபோது எதிர்பாரத விதமாக வேன் கவிழ்ந்தது.

    [சும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..!]

    இந்த விபத்தில் குருமலையை சேர்ந்த ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேர் கோவை மருத்துவமனைக்கும் 9 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Accident near in Thirupur. Van fall down kills 5 memembers including a woman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X