For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய வழக்கில் ஒருவர் கைது

திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் காவலர் மீது ஆசிட் வீசிய வழக்கில் பிரபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் டவுன் என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ். இவரது மனைவி லாவண்யா திருப்பத்தூரில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். கடந்த 23 ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் லாவண்யா மீது ஆசிட் வீசினர்.

 Acid Attack On Woman police in vellore, one person arrested

இதில், அவரது முகம், கழுத்து, கண், முதுகு பகுதிகள் சிதைந்தன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் லாவண்யாவின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டனர். ஆசிட் வீச்சுக்கு உள்ளான லாவண்யா வலது கண் பார்வை இழந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் பெண் போலீஸ் லாவண்யா மீது ஆசிட் வீசியதாக பிரபு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

English summary
Acid Attack On Woman police in vellore, thirpathur, one person arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X