பெரியார் சிலையை உடைத்தவர்கள் 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.. எடப்பாடியார் பதில்
பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பெரியார் சிலையை உடைத்தவர்கள் 12 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரியார் சிலைகள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து ஸ்டாலினின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.
அப்போது பெரியார் சிலை உடைக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் 12 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மற்றும் ஆலங்குடியில் பெரியார் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.