சமூக வலைத்தளங்களில் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு அஜித் எச்சரிக்கை!
சென்னை: சமூக வலைத்தளங்களில் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு நடிகர் அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது பெயரால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் அஜித் தெரிவித்துள்ளார்.
அஜித் பெயரால் செயல்படும் சமூக வலைத்தள பக்கங்கள், திரையுலக பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்களை கேலி செய்வதாக வந்த தகவல்களை தொடர்ந்து அஜித் தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு #அஜித் எச்சரிக்கை! #Ajith #Vivegam https://t.co/Z1HdVmGJoV pic.twitter.com/7BRYeoYMVh
— Oneindia Tamil (@thatsTamil) August 19, 2017
அஜித்துக்கு பேஸ்புக், டிவிட்டர், ஸ்நாப்சாட் அல்லது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் கணக்கு இல்லை என்றும், அதுபோன்ற பெயர்களில் செயல்படும் கணக்குகள் போலியானவை என்றும், அப்படி அஜித் பெயரை தவறாக பயன்படுத்துவோர் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என யாருடைய மனதாவது இதுபோன்ற நபர்களால் புண்பட்டிருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.