அமைச்சரின் டிவிட்டுக்கு நடிகர் அரவிந்த் சாமி சொன்ன பதில் என்ன தெரியுமா?
சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் கொடுக்கப்படும் தொல்லைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் அர்விந்த் சாமி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பால் அசாதாரண சூழல் நிலவுகிறது. முதல்வராக யார் பதவி ஏற்கக்கூடும் என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி வாயிலாக பல்வேறு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்ததாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஒரு கருத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், கடந்த 48 மணி நேரமாக தொலைபேசி அழைப்புகள் வாயிலாக அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொந்தரவு அளிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
How ethical is this harassment of every Admk MLA thro trolling & spurious telecalls for the past 48 hours ? We have a right to our freedom !
— Pandiarajan K (@mafoikprajan) February 9, 2017
அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் இந்த பதிவுக்கு டிவிட்டர் மூலமாக நடிகர் அர்விந்த் சாமி அளித்துள்ள பதிலில், அசாதாரண சூழல் நிலவும் நேரங்களில் மக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த விரும்புவர். அது எந்த கருத்தாக இருந்தாலும் அதன்படி நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின்படி உங்களிடம் கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
Whatever your choice of candidate, please do not insult people personally. My humble request to you is to discuss only on merit and facts.
— arvind swami (@thearvindswami) February 9, 2017