ஒரு தியானம் கலைந்தது.. தமிழகம் தலை நிமிர்ந்தது... - நடிகர் மனோ பாலா ஓபிஎஸ்க்கு ஆதரவு
நடிகரும் திரைப்பட இயக்குநருமான மனோபாலா முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகரும் திரைப்பட இயக்குநருமான மனோபாலா முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு தியானம் கலைந்தது, தமிழகம் தலை நிமிர்ந்தது என அவர் கூறினார்.
அதிகாரப் போட்டியில் பிளவுபட்டு கிடக்கும் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டு அணிகளாக உள்ளது. ஓபிஎஸ் அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடிகரும் திரைப்பட இயக்குநருமான மனோபாலா முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓபிஎஸின் வீட்டிற்கு சென்று நடிகர் மனோபாலா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் ஒரு தியானம் கலைந்தது, தமிழகம் தலை நிமிர்ந்தது என்றார். தமிழகம் விழித்துக் கொண்டதாக அவர் கூறினார். மேலும் அதிமுகவினருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவுரவம் அளித்துள்ளார் என்றும் நடிகர் மனோபாலா கூறினார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் மனோ பாலா அண்மையில் சசிகலா குறித்து வாட்ஸ்ப்பில் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.