தமிழ் பொறுக்கி.. சுப்பிரமணிய சாமிக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி!
தமிழர்களை தொடர்ந்து பொறுக்கி என்று கூறிவரும் சுப்பிரமணிய சாமியை நடிகர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
சென்னை: தமிழர்களை தொடர்ந்து பொறுக்கி என்று கூறிவரும் சுப்பிரமணிய சாமியை நடிகர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
பாஜக ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சாமி தமிழர்களை அவ்வப்போது பொறுக்கி எனக் கூறி சமூக வலைதளங்களில் வறுபடுவார். ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக தமிழக இளைஞர்கள் போராடியதையும் அவர் கொச்சைப்படுத்தினார்.
ரஜினி, கமல் என பாஜகவுக்கு எதிராக கருத்துக்கூறுபவர்களையும் கடுமையாக வசைப்பாடி வந்தார் சுப்பிரமணியசாமி. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர் டெல்லியில் இருந்து ஒருவர் தன்னை தமிழ் பொறுக்கி என்று கூறுவதாக சுப்பிரமணிய சாமி கூறியதை மறைமுகமாக கூறினார். மேலும் நான் பொறுக்கிதான் என்ற அவர் அறிவு, ஞானத்தை நான் பொறுக்குவேன். பொறுக்கி என்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் கமல் கூறினார்.
பொறுக்கி என தமிழர்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் சுப்பிரமணிய சாமிக்கு நடிகர் கமல் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.