For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமல் நெற்றியில் இருப்பது விபூதியல்ல... மேக்கப் தான்: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் கமல் நெற்றியில் விபூதியுடன் காணப்படும் புகைப்படம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ‘கமல் நெற்றியில் இருப்பது மேக்கப் தான் எனத் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெற்றிநடைப் போட்ட த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தின் நாயகனாக கமலும், அவரது மனைவியாக கௌதமியும் நடித்து வருகின்றனர்.

கடந்தவாரம் தென்காசி பேருந்து நிலையத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் நடந்து வருகிறது.

இந்நிலையில், நெற்றியில் விபூதியுடன் நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மட ஜீயரை கமல் சந்திப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக தழல் முடியரசன் என்பவர் எழுப்பியுள்ள வினாவிற்கு தனது வலைதளப்பக்கத்தில் பாபநாசம் திரைப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத் தாளர் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

மேக்கப்...

மேக்கப்...

படத்தை இன்னொரு முறை பாருங்கள். கமல் நெற்றியில் விபூதியுடன் இருக்கிறார். விபூதி அல்ல மேக்கப். பாபநாசம் படத்தில் வரும் சுயம்புலிங்கத்தின் தோற்றம்

நானும் அங்கிருந்தேன்...

நானும் அங்கிருந்தேன்...

வானமாமலை ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நானும் அங்கிருந்தேன். அது நான் எழுதும் படம்.

அனுமதி கோரினோம்...

அனுமதி கோரினோம்...

தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள். நான்குநேரி வானமாமலை ஆலயத்தில் வெளிப்பிராகாரத்தில் சில பகுதிகள் மட்டும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆகவே அங்கே படப்பிடிப்பு நடத்த கோரினோம்.

மரியாதை நிமித்த சந்திப்பு...

மரியாதை நிமித்த சந்திப்பு...

ஜீயர் அவர்கள் அனுமதி அளித்தார். அங்கே படப்பிடிப்பு நடந்தபோது ஜீயரைச் சென்று சந்தித்து மரியாதை செலுத்தினார் கமல். அந்தப்படம்தான் அது.

நாத்திகர் என்றால்...

நாத்திகர் என்றால்...

நாத்திகர் என்றால் மரியாதை தெரியாதவர் என நான் நினைக்கவில்லை. நீங்கள் ஏன் நினைக்கவேண்டுமென புரியவில்லை.

விபூதி பூசிய பெரியார்...

விபூதி பூசிய பெரியார்...

முன்பு ஒரு காலத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக் காண ஈவேரா சென்றிருந்தார். திரும்பும்போது அவர் அளித்த விபூதியை நெற்றியில் அணிந்துகொண்டார். படம் கூட வெளியாகியிருக்கிறது" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The dialogue writer of Papanasam movie Jayamohan has explained that actor kamal jiyar meeting is just an courtesy call.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X