கொலை செய்வது கோழைத்தனம்.. கருணாசுக்கு கார்த்திக் நறுக் குட்டு
Recommended Video
சென்னை: கொலை செய்வது கோழைத்தனம் என்று நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசுக்கு, நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்ய கூடியவர்கள் நாஙகள் என்று தெரிவித்தார். முதல்வரே நான் அடிப்பேன் என்று பயப்படுவார் என்று கூறினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேறு சில ஜாதிகளையும் குறிப்பிட்டு கேலி பேசினார் கருணாஸ்.
இந்த பேச்சுக்காக கருணாஸ் மீது பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நாடார் சங்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கருணாஸ் சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்த கார்த்திக் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தில் வீரத்திற்கு பஞ்சம் இல்லை.
முக்குலத்தோர் உட்பட எல்லா சமூகத்தினரும் வீரர்கள்தான். ஆனால், கொலை செய்வது வீரம் கிடையாது, அது கோழைத்தனம். நிராயுதபாணியாக நிற்கும் ஒருவரை திட்டம்போட்டு கொல்வது கோழைத்தனம்.
வீரத்தோடு எத்தனையோ பிரச்சினைகளுக்காக போராடலாமே தவிர, கொலை செய்வதெல்லாம் வீரத்தில் சேராது. வீரர்கள் என்பவர்கள் நேரடியாக நின்று போராடுபவர்கள். பின்னால் இருந்து செயல்படுபவர்கள் கிடையாது. கருணாஸ் என்ன அர்த்தத்தில் இப்படி பேசினார் என்பது தெரியவில்லை. இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.