மன்சூர் அலிகான் 3வது மனைவி வஹிதா மீது கொலை வெறி தாக்குதல்!
மன்சூர் அலிகான் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Recommended Video
சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதா மீது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள். 2-வது மனைவி பெயர் பேபி என்கிற ஹமீதா. இவருக்கு 2 பிள்ளைகள். மகள் பெயர் லைலா அலிகான் 22, மகன் பெயர் மீரான் அலிகான் 15.
[நக்கீரன் கோபால் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு!]
3 பேருக்கும் சண்டைதான்
மன்சூர் அலிகானின் 3-வது மனைவி பெயர் வஹிதா. இவர் மன்சூர் அலிகானின் அக்கா மகள் ஆவார். இந்த 3 மனைவிகளும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டே இருப்பார்களாம்.
2 பேர் தாக்கினார்கள்
இந்த நிலையில், நேற்று தலையில் ரத்தம் சொட்ட சொட்ட நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார் வஹிதா. இதை கண்ட அங்கிருந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கணவனின் 2-வது மனைவி பேபியின் வாரிசுகள் லைலா அலிகானும், மீரான் அலிகானும் சேர்ந்து தன்னை இரும்பு கம்பிகளால் தாக்கியதாக புகார் கூறினார்.
வேடிக்கை பார்த்தார் மன்சூர்
இப்படி அந்த 2 பிள்ளைகளும் தன்னை இரும்பு கம்பியால் அடிப்பதை மன்சூர் அலிகானும், இரண்டாவது மனைவி பேபியும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் பிள்ளைகள் 2 பேர், மற்றும் மன்சூர் அலிகான், பேபி என 4 பேர் மீதும் வஹிதா புகார் அளித்தார். இந்தபுகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஒரு புகார்
மன்சூர் அலிகான் மீது ஏற்கனவே நிறைய மோசடி வழக்கு, பலாத்கார வழக்குகள், மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் என ஏராளமாக தொடுக்கப்பட்டன. இது குறித்தும் விசாரணை இன்னமும் போய் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், 3-வது மனைவி கொடுத்த வழக்கும் புகார் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.