ஜெ. மரணத்தில் மர்மம் .. அரசு விளக்க வேண்டும்.. கூறுகிறார் ராதாரவி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
வாணியம்பாடி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அதிமுக மூன்று பிரிவுகளாக பிரிந்துவிட்டக் காரணத்தால் தான், நான் அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தேன். முதல்வர் பதவிக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாவர் எடப்பாடி பழனிச்சாமி, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்ம இருப்பதாக மக்களிடம் பல சந்தேகங்கள் நிலவி வருகிறது. அதற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும்.
ஒரு சாதாரண நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது அவரின் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவமனை வழங்குகிறது. ஆனால் முதல்வரின் மரணம் தொடர்பாக அப்போலா மருத்துவமனை ஏன் வழங்கவில்லை என்றார் ராதாரவி.