For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரியின் 30வது ஆண்டுவிழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்துவைக்கும் ரஜினி

சென்னை : சென்னையில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வருகிற 5ம் தேதி எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினி திறந்து வைக்க உள்ளார். இதில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

சென்னை வேலப்பன்சாவடியில் ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 30வது ஆண்டு விழா வருகிற 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்தி திறந்து வைக்க உள்ளார்.

Actor Rajinikanth soon to unveil MGR Statue

இவ்விழாவில் மொரீஷியஸ் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் பரசிவம்பிள்ளை வையாபுரி மற்றும் இலங்கை கல்வித்துறை அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதிய கட்டிடங்களையும், புகைப்படக் கண்காட்சியையும் திறந்து வைக்க உள்ளனர்.

இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனரும், துணை வேந்தருமான ஏ.சி. சண்முகம் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழாவுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X