For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனித வதை பற்றி ஏன் வாயே திறப்பதில்லை பீட்டா?... சத்தியராஜ் சுளீர் கேள்வி

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நடிகர் சத்தியராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மனித வதை குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என பீட்டா அமைப்புக்கு கேள்வி எழுப்பினார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சத்தியராஜ் மனித வதை குறித்து ஏன் பீட்டா அமைப்பு வாய்திறக்கவில்லை என்றார்.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பழ நெடுமாறன், நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Actor Sathyaraj asks PETA to open their mouth on farmers death

போராட்டத்தின் போது பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் பேசினார். அப்போது மிருகவதை பற்றி பேசுபவர்கள் மனித வதை பற்றி ஏன் கண்டுகொள்வதில்லை என அவர் பீட்டா அமைப்புக்கு கேள்வி எழுப்பினார்.

விவசாயிகள் உயிரிழப்பு மனித வதை என தெரியவில்லையா எனவும் சத்யராஜ் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் சாதி, மதத்தால் பிரிந்து கிடக்கும் வரை நம்மை மிதிக்கத்தான் செய்வார்கள் என்றும் கூறினார்.

English summary
CPI conducting hunger strike in Chennai Cheppak. In this hunger strike protest Actor Sathyaraj has Participating. He has asked PETA Why do not you open your mouth for farmers death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X