ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்: நடிகர் விவேக் கருத்து
பகவானுக்கு ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஆசிரியர் பகவானுக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.
பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆஙகில ஆசிரியர் பகவானுக்கு அரசு பணியிட மாற்றம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை கட்டிப்பிடித்து வெளியே விடாமல் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாணவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த பணியிட மாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு ஆசிரியரின் இடமாற்றம் மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது என்றால், அவரது பண்பை நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்- இவ்வாறு விவேக் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.