நட்சத்திர கிரிக்கெட் விவகாரம்: விஷால், நாசர், கார்த்தி மீது கைது நடவடிக்கை பாய்கிறதா?
நட்சத்திர கிரிக்கெட் விவகாரத்தில் விஷால், நாசர் கார்த்தி மீது கைது நடவடிக்கை பாயக் கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: நட்சத்திர கிரிக்கெட் விவகாரத்தில் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி மீது கைது நடவடிக்கை பாயலாம் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
நட்சத்திர கிரிக்கெட் முறைகேடு விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இருந்தால் விஷால், கார்த்திக், நாசர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த மூவரையும் கைது செய்வதற்கான லாபிகள் தீவிரமாக இருக்கிறதாம்.
கடந்த ஓரிரு நாட்களாக கோட்டை தலைமையை நடிகர்கள் சிலர் நெருக்கி வருவதாக கூறப்படுகிறது. கார்த்தி, விஷால், நாசர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனராம்.
அத்துடன் கமல்ஹாசனை இயக்குவதே இந்த மூவர்தான் என்றும் அரசுக்கு எதிராக சூர்யா பேசியதன் பின்னணியிலும் இவர்கள்தான் இருக்கிறார்கள் எனவும் கோட்டை தலைவரிடம் போட்டு கொடுத்திருக்கின்றனர்.
மேலும் நாட்டமையும் கூட கோட்டை தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறராம். இதையடுத்து இந்த மூவர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து கோட்டை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.