நானும் அபிராமியும் ஒன்றா? பிரஸ் மீட்டில் கண்ணீருடன் மல்லுக்கட்டிய நிலானி!
நானும் அபிராமியும் ஒன்றா என கேட்டு நடிகை நிலானி பிரஸ்மீட்டில் கதறினார்.
Recommended Video
சென்னை: நானும் குழந்தைகளை கொன்ற அபிராமியும் ஒன்றா என கேட்டு நடிகை நிலானி பிரஸ்மீட்டில் கதறினார்.
சீரியல் நடிகை அபிராமி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் காந்தி லலித்குமாரும் நிலானியும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகியது. இதனால் நிலானி காந்தி லலித்குமாரை காதலித்து ஏமாற்றியது உண்மை என கூறப்பட்டது.
பிரஸ்மீட்
இதுதொடர்பான விசாரணைக்கு பயந்து நிலானி தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நிலானி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
கைவிடப்பட்ட பெண்
அப்போது காந்தி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிய அவர், தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றார். கணவரால் கைவிடப்பட்ட பெண் நான் என்றும் கூறி கண்ணீர் விட்டார்.
பல பெண்கள் பாதிப்பு
காந்தி லலித்குமார் ஒரு பொம்பளை பொறுக்கி என்றும் பணத்துக்காக பல பெண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியுள்ளார். இதனை அவரது போனை பார்த்து தெரிந்துகொண்டேன் என்ற நிலானி, காந்தியால் பாதிக்கப்பட்ட பெண்கள் என கூறி சில பெண்களின் பெயரையும் பட்டியலிட்டார்.
என்னை பற்றி அவதூறு
மேலும் பெண் குழந்தையை வைத்துள்ள நான் எப்படி ஒரு பொம்பளை பொறுக்கியை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் பரபரப்படுகின்றன என்றும் நிலானி ஆத்திரப்பட்டார்.
அபிராமியும் நானும் ஒன்றா?
மேலும் கள்ளக்காதலனுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதாக வருத்தப்பட்ட நிலானி நானும் அபிராமியும் ஒன்றா என கேட்டு கண்ணீர்விட்டு கதறினார்.